Sunday 19th of May 2024 08:51:42 AM GMT

LANGUAGE - TAMIL
-
இலங்கை - பாகிஸ்தான் பிரதமர்கள்  அலரி மாளிகையில் சந்தித்துப் பேச்சு!

இலங்கை - பாகிஸ்தான் பிரதமர்கள் அலரி மாளிகையில் சந்தித்துப் பேச்சு!


இலங்கைக்கு இன்று விஜயம் செய்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மற்றும் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோருக்கிடையிலான சந்திப்பு அலரி மாளிகையில் இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீடு, சுகாதாரம், கல்வி, விவசாயம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், பாதுகாப்பு, கலாசாரம் மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளில் உறவுகளை வலுப்படுத்துவதில் இரு தரப்பினரும் கவனம் செலுத்தினர்.

முன்னதாக இன்று மாலை இலங்கை வந்திறங்கிய பாகிஸ்தான் பிரதமருக்கு 19 குண்டுகள் முழங்க சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

பாகிஸ்தான் பிரதமருடன், அந்நாட்டு வெளியுறவு மந்திரி ஷா மஹ்மூத் குரேஷி உள்ளிட்ட மூத்த அரசு அதிகாரிகளும் இலங்கை வந்துள்ளனர்.


Category: செய்திகள், புதிது
Tags: மகிந்த ராசபக்ச



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE